“ கலைப்பணியில் ஈடுபாடு உடையவர்கள் தமக்கு உகந்த பாணியில் சுதந்திரமாக ஒருவிதசமர்ப்பண மனப்பான்மையுடன், ஆத்மதிருப்தியுடன் செயல்பட்டுவருகையில் அவர்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் நெற்றியில் ஒரு முத்திரை (label) குத்தப்படுகிற்து.இது, கலைபிரிவுகள் பாற்பட்டதாக இருக்கலாம், எழுத்துத்துறையென்றால் மொழி, நடை, இலக்கியப்பிரிவுகள்-கதை, கவிதைபோன்றவை சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம்.ஏனைய கலைவகையறாக்கள்-ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், கூத்து எல்லாம் இதில் அடங்கும்.தமிழ் எழுத்தாளன், மலையாள எழுத்துகாரன், கவிஞன், கதாசிரியன், நாவலாசிரியன்,நாடகாசிரியன்,தவிர ஓவியன்,சிற்பி, பாடகன், நாட்டியக்காரி இத்யாதி,இத்யாதிமுத்திரைகள்.ரவீந்திரநாத டாகூரை கவிஞர், கதாசிரியர்,நாவலாசிரியர் என்றெல்லாம் கூறுகட்டி விமரிசையாக திறனாய்வாளர்கள் விமர்சித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்உண்மையான கலைஆர்வத்துடன் ,அனுபூதியுடன் ஓவியக்கலையிலும்(painting) தன் செய்த்திறனை காட்டிக்கொகொண்டிருந்தார். எனவே,கலைஞன் தன் கலைஆர்வத்தை சமனப்படுத்த,வெளிப்பிரகடனம் செய்ய,மற்றவர்களின் முத்திரைகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல்- அனால் ஆங்கிலத்தில் சொல்வார்களல்லவா-a rolling stone gathers no mass என்று,அப்படிஏனோதானோ என்றில்லாமல் செய்வதை திருந்தச் செய் என்ற முதுமொழிக்கேற்ப தன் முழு சித்தத்தையும் சீரிய முறையில் ஒருமுகப்படுத்தி-அது ஐந்து வரி கவிதையாக இருக்கலாம்,ஆயிர பக்க நாவலாக இருக்கலாம் செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான் சிலாக்கியமானது.”
நீல பத்மநாபன்
31-3-2011-ல் திருவனந்தபுரம் பாரத்பவன் நிகழ்த்திய தேசீய ஒருமப்பாடு கருத்தரங்கில் எழுத்தனுபவங்கள்
என்றஎழுத்தாளர் பட்டறை துவக்க உரையிலிருந்து.
Tuesday, April 12, 2011
Wednesday, March 16, 2011
நீல பத்மநாபன் கவிதைகள் கர்ணாடக இசையில்
நீல பத்மநாபன் கவிதைகள்.………………. ராகம்
1) தூக் கம் ....... .(1966)........................... .நாட்டை
2) நெருப்புக்குச்சி (1967) கானடா
3)நிலை .............. (1967)................................ .ரஞ்சினி
4)? .. ............... (1967)............................... .மோகனம்
5)விமோசனம்.... (1973)............................... . ஹம்சநாதம்
6) )பூதக்கண்ணாடி.....(1993).................. அட்டனா
7) அபகரணம்.......... .(1973)............................ கல்யாணி
8) பக்கம்....... (1973)...................................கானடா
9) தேரோடும் வீதி....(1987)................... ஹமீர்கல்யாண
10) செக்போஸ்டுகள் (1973)................... சாமா
11)இறைஞ்சல்................(1993)..................... நாத நாம க்ரியா
1) தூக்கம்
ஜனனியின் கருப்பையில்
மார்ப்பின் கதகதப்பில்
கயிறு நுனி தூளியில்
கிரீச்சிடும் தொட்டிலில்
தந்தையின் அரவணைப்பில்
கோரைப்புல் பாயில்
சூரலிழைக் கட்டிலில்
எதிர்பாலின் கிளுகிளுப்பில்
வெல்வெட் மெத்தையில்
சேய்களின் ஸ்பரிசத்தில்
கோரைப்புல் பாயில்
கட்டாந்தரையில்
நா லு
பே ர்
தோள் தாங்கும்
பச்சை மூங்கில் பாடையில்
இடுகாட்டு வரட்டியில்
உய்விக்கும் நெருப்பில்
ஆறடி மண்ணில்
அந்தரீஷ வெளியில்
2) நெருப்புக்குச்சி
உருண்ட முனையில்
கந்தகச் செழுமை
குருதிச் செம்மை
பரந்த பரப்பில்
ரஸாயனக் கலவை
சிமிழின் சீற்றம்
அழுத்தி ஆழ்கையில்
அழிக்கும் செந்தீ
ஆக்கும் வெண் தீ
எரிந்து அடங்கையில்
புகையிழை
கரித்துகள்கள்
நூலிழை ் உயிர் லட்சங்கள்
3)நிலை
எழுத்தாணி மழுங்கியும்
சளைக்கவில்லை
எழுதாமல் இருக்கவும் முடியவில்லை
எழுதிய எழுத்துக்கோ
கணக்குமில்லை
எழுதாது அணைந்தவை
கொஞ்சமில்லை
சுவடியைத் தூக்கி நான்
அலையவில்லை
சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ
நாதியில்லை
4) ?
பிறவிக்கு நன்றி
பெற்றோருக்கு
வளர்ச்சிக்கு நன்றி
அவர்களுக்கே
கல்விக்கு நன்றி
ஆசானுக்கு
கலவிக்கு நன்றி
மனைவிக்கு
பதவிக்கு நன்றி
அரசுக்கு
பாசத்திற்கு நன்றி
உடன்பிறப்புக்கு
நட்புக்கு நன்றி
நண்பனுக்கு
அருளுக்கு நன்றி
இறைவனுக்கு
கொள்ளிக்கு நன்றி
குழந்தைக்கு
மிருத்துயூவுக்கு நன்றி
?
5) விமோசனம்
எழுதப்படாதிருந்தால்
களங்கப்படாதிருக்கும்
ஏடே
பாடப்படாதிருந்தால்
சேதப்படாதிருக்கும்
பாட்டே
உனக்கும்
எனக்கும்
இந்த ஜென்மத்தில்
விமோசனம்
உண்டா
6) பூதக்கண்ணாடி
ஊரை
உலகை
பூதக்கண்ணாடியில்
பார்த்தோம்
களித்தோம்
கண்ணாடி
பின் திருப்பியதும்
சுய முகங்களைக்
கண்டோம்
அப்பப்பா...
களிப்பெல்லாம்
போச்சு
கொந்தளிப்பு
கொதிப்பு
குதிப்பு
வெட்கம்
மட்டும்?
7) அபகரணம்
காத்திருந்தேன்
கள் மொந்தையுடன்
தேன் சுளையுடன்
நீ வந்தாய்
கள்ளையும்
தேனையும்
தந்து
ஆத்மாவை
அபகரித்துக்கொண்டாய்
பறிபோன ஆத்மாவை
நினைக்கவோ
நேரமின்றி
கள்ளிலும்
தேனிலும்
கரைந்துருகிப்போனேன்
கள் கசக்கையில்
தேன் புளிக்கையில்
ஆத்மாவைத் தேடினால்
கிடைக்குமோ
தெரியல்லே
8) பக்கம்
படிக்கப்
படிக்க
பக்கங்கள்
தீரவில்லை
படிப்பதை
நிறுத்தியதும்
பக்கங்கள்
தீர்ந்தன
9) தேரோடும் வீதி
இணைந்தவர்கள் கூட்டல்களாகி
கழந்தவர்கள் கழித்தல்களாகி
வாழ்க்கைப் பயணம்
தொடர்கையில்
கிரவுஞ்சப் பட்சியின்
விரக கீதமாய்
சிறகடித்து ஒலிசெய்யும்
நெஞ்சத்தடம்
சொல் ஏர்கள்
தாறுமாறாய்
உழுது மறித்திட
குருதித் துளிகள் தெறித்திடும்
யுத்தக்க்ளம்
அண்டம் கிடுங்கிட
ஆனந்த நர்த்தனம் ஆடிட
அகந்தை அசூயை
கோப தாபப்
புகழ்ப் பேராசைகளின்
கூர் முனைகள்
நசுங்கிச் சிதறிட
அஞ்ஞான இருளகற்றும்
மெய்ஞானப் பேரொளி
அஷ்ட திக் முகங்களில்
பூசிச் சிலிர்த்திட
ஆதித்த தேவனின்
காலத்தேர் சக்கிரங்கள்
நித்தம் நித்தம்
ஓடோடிக் கொண்டிருக்கும்
வீதியாம்
விதியதன் வீதி
10) செக்போஸ்டுகள்
ஊரில்லை வேரில்லை
மொழியில்லை வழியில்லை
மண்ணொன்றும்
உன்னை
மகனாய்க் கொள்ளவுமில்லை
பிறந்த பொன்னாட்டை
மூளியாக்கும்
செக்போஸ்டுகள்
வாயைத் திறக்காமல்
உனக்குள்ளே
கூனிக்குறுகி
சுய இரக்கச் சிந்தையில்
மறுகிப்போய்
நான் என்ற கல்லறையில்
அகம் என்ற சிலுவையில்
அடங்கிடும்
யக்ஞத்திலும்
தோற்றுப் போய்
புகலிடம் கிடைக்காது
ஆடி நடக்கும்
பாபாத்மா நீ
11) இறைஞ்சல்
குரல் நன்றாயிருக்கையில்
பாட்டை நிறுத்திவிடு
விரலுக்கு வீக்கம் வரும்முன்
வீணையை விற்றுவிடு
பரல்கள் சிதறும் முன்
சதங்கையை அவிழ்த்துவிடு
படுக்கையில் விழும்முன்
பாடையில் ஏற்றிவிடு
Recited by Sri Ramachandran in All India Radio, Thiruvananthapuram (broadcast in 1993)
1) தூக் கம் ....... .(1966)........................... .நாட்டை
2) நெருப்புக்குச்சி (1967) கானடா
3)நிலை .............. (1967)................................ .ரஞ்சினி
4)? .. ............... (1967)............................... .மோகனம்
5)விமோசனம்.... (1973)............................... . ஹம்சநாதம்
6) )பூதக்கண்ணாடி.....(1993).................. அட்டனா
7) அபகரணம்.......... .(1973)............................ கல்யாணி
8) பக்கம்....... (1973)...................................கானடா
9) தேரோடும் வீதி....(1987)................... ஹமீர்கல்யாண
10) செக்போஸ்டுகள் (1973)................... சாமா
11)இறைஞ்சல்................(1993)..................... நாத நாம க்ரியா
1) தூக்கம்
ஜனனியின் கருப்பையில்
மார்ப்பின் கதகதப்பில்
கயிறு நுனி தூளியில்
கிரீச்சிடும் தொட்டிலில்
தந்தையின் அரவணைப்பில்
கோரைப்புல் பாயில்
சூரலிழைக் கட்டிலில்
எதிர்பாலின் கிளுகிளுப்பில்
வெல்வெட் மெத்தையில்
சேய்களின் ஸ்பரிசத்தில்
கோரைப்புல் பாயில்
கட்டாந்தரையில்
நா லு
பே ர்
தோள் தாங்கும்
பச்சை மூங்கில் பாடையில்
இடுகாட்டு வரட்டியில்
உய்விக்கும் நெருப்பில்
ஆறடி மண்ணில்
அந்தரீஷ வெளியில்
2) நெருப்புக்குச்சி
உருண்ட முனையில்
கந்தகச் செழுமை
குருதிச் செம்மை
பரந்த பரப்பில்
ரஸாயனக் கலவை
சிமிழின் சீற்றம்
அழுத்தி ஆழ்கையில்
அழிக்கும் செந்தீ
ஆக்கும் வெண் தீ
எரிந்து அடங்கையில்
புகையிழை
கரித்துகள்கள்
நூலிழை ் உயிர் லட்சங்கள்
3)நிலை
எழுத்தாணி மழுங்கியும்
சளைக்கவில்லை
எழுதாமல் இருக்கவும் முடியவில்லை
எழுதிய எழுத்துக்கோ
கணக்குமில்லை
எழுதாது அணைந்தவை
கொஞ்சமில்லை
சுவடியைத் தூக்கி நான்
அலையவில்லை
சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ
நாதியில்லை
4) ?
பிறவிக்கு நன்றி
பெற்றோருக்கு
வளர்ச்சிக்கு நன்றி
அவர்களுக்கே
கல்விக்கு நன்றி
ஆசானுக்கு
கலவிக்கு நன்றி
மனைவிக்கு
பதவிக்கு நன்றி
அரசுக்கு
பாசத்திற்கு நன்றி
உடன்பிறப்புக்கு
நட்புக்கு நன்றி
நண்பனுக்கு
அருளுக்கு நன்றி
இறைவனுக்கு
கொள்ளிக்கு நன்றி
குழந்தைக்கு
மிருத்துயூவுக்கு நன்றி
?
5) விமோசனம்
எழுதப்படாதிருந்தால்
களங்கப்படாதிருக்கும்
ஏடே
பாடப்படாதிருந்தால்
சேதப்படாதிருக்கும்
பாட்டே
உனக்கும்
எனக்கும்
இந்த ஜென்மத்தில்
விமோசனம்
உண்டா
6) பூதக்கண்ணாடி
ஊரை
உலகை
பூதக்கண்ணாடியில்
பார்த்தோம்
களித்தோம்
கண்ணாடி
பின் திருப்பியதும்
சுய முகங்களைக்
கண்டோம்
அப்பப்பா...
களிப்பெல்லாம்
போச்சு
கொந்தளிப்பு
கொதிப்பு
குதிப்பு
வெட்கம்
மட்டும்?
7) அபகரணம்
காத்திருந்தேன்
கள் மொந்தையுடன்
தேன் சுளையுடன்
நீ வந்தாய்
கள்ளையும்
தேனையும்
தந்து
ஆத்மாவை
அபகரித்துக்கொண்டாய்
பறிபோன ஆத்மாவை
நினைக்கவோ
நேரமின்றி
கள்ளிலும்
தேனிலும்
கரைந்துருகிப்போனேன்
கள் கசக்கையில்
தேன் புளிக்கையில்
ஆத்மாவைத் தேடினால்
கிடைக்குமோ
தெரியல்லே
8) பக்கம்
படிக்கப்
படிக்க
பக்கங்கள்
தீரவில்லை
படிப்பதை
நிறுத்தியதும்
பக்கங்கள்
தீர்ந்தன
9) தேரோடும் வீதி
இணைந்தவர்கள் கூட்டல்களாகி
கழந்தவர்கள் கழித்தல்களாகி
வாழ்க்கைப் பயணம்
தொடர்கையில்
கிரவுஞ்சப் பட்சியின்
விரக கீதமாய்
சிறகடித்து ஒலிசெய்யும்
நெஞ்சத்தடம்
சொல் ஏர்கள்
தாறுமாறாய்
உழுது மறித்திட
குருதித் துளிகள் தெறித்திடும்
யுத்தக்க்ளம்
அண்டம் கிடுங்கிட
ஆனந்த நர்த்தனம் ஆடிட
அகந்தை அசூயை
கோப தாபப்
புகழ்ப் பேராசைகளின்
கூர் முனைகள்
நசுங்கிச் சிதறிட
அஞ்ஞான இருளகற்றும்
மெய்ஞானப் பேரொளி
அஷ்ட திக் முகங்களில்
பூசிச் சிலிர்த்திட
ஆதித்த தேவனின்
காலத்தேர் சக்கிரங்கள்
நித்தம் நித்தம்
ஓடோடிக் கொண்டிருக்கும்
வீதியாம்
விதியதன் வீதி
10) செக்போஸ்டுகள்
ஊரில்லை வேரில்லை
மொழியில்லை வழியில்லை
மண்ணொன்றும்
உன்னை
மகனாய்க் கொள்ளவுமில்லை
பிறந்த பொன்னாட்டை
மூளியாக்கும்
செக்போஸ்டுகள்
வாயைத் திறக்காமல்
உனக்குள்ளே
கூனிக்குறுகி
சுய இரக்கச் சிந்தையில்
மறுகிப்போய்
நான் என்ற கல்லறையில்
அகம் என்ற சிலுவையில்
அடங்கிடும்
யக்ஞத்திலும்
தோற்றுப் போய்
புகலிடம் கிடைக்காது
ஆடி நடக்கும்
பாபாத்மா நீ
11) இறைஞ்சல்
குரல் நன்றாயிருக்கையில்
பாட்டை நிறுத்திவிடு
விரலுக்கு வீக்கம் வரும்முன்
வீணையை விற்றுவிடு
பரல்கள் சிதறும் முன்
சதங்கையை அவிழ்த்துவிடு
படுக்கையில் விழும்முன்
பாடையில் ஏற்றிவிடு
Recited by Sri Ramachandran in All India Radio, Thiruvananthapuram (broadcast in 1993)
Sunday, January 23, 2011
கவியோகி
கவியோகி
சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும்
யோகமும்
நீல பத்மநாபன்
சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும்
யோகமும்
நீல பத்மநாபன்
Monday, June 28, 2010
ஆத்மானந்தம்
ஆத்மானந்தம்
அறிவாளிகளிடம்
அசடனாகவும்
அசடர்களிடம்
அறிவாளியாகவும்
மேலும் கீழும்
தத்தளிக்கும் மனமே
அறிவாளியிடம்
அறிவாளியாக
இயலாவிடிலும்
அசடனிடமும்
அசடனாகலாமல்லவா
மேலும் மேலும்
அறிவதால்
அகந்தையை அகற்று
ஆத்மானந்தம் கொள்வாய்
பேரானந்தம்
ஒரு வாசல்
அடைந்துவிட்டதென்று
ஓய்ந்துவிடாதே
உனக்குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒம்பது வாசல்கள்
ஒவ்வொன்றாய்
திறந்திட
முயற்சிச்செய்வாய்
பேரானந்தம்
பெருகிடக் காண்பாய்
அறிவாளிகளிடம்
அசடனாகவும்
அசடர்களிடம்
அறிவாளியாகவும்
மேலும் கீழும்
தத்தளிக்கும் மனமே
அறிவாளியிடம்
அறிவாளியாக
இயலாவிடிலும்
அசடனிடமும்
அசடனாகலாமல்லவா
மேலும் மேலும்
அறிவதால்
அகந்தையை அகற்று
ஆத்மானந்தம் கொள்வாய்
பேரானந்தம்
ஒரு வாசல்
அடைந்துவிட்டதென்று
ஓய்ந்துவிடாதே
உனக்குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒம்பது வாசல்கள்
ஒவ்வொன்றாய்
திறந்திட
முயற்சிச்செய்வாய்
பேரானந்தம்
பெருகிடக் காண்பாய்
போதும்
போதும்
சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா
அருள்ஜோதியே
இத்தனை நாள் வாழவிட்டாய்
எண்ணியவை எல்லாம்
அடைந்ததாய் ச்சொல்லவில்லை
ஆனால்
எண்ணாதவை
மனதுக்கு
இதம் அளிப்பவை
அல்லாதவை
தந்தருளியிருக்கிறாய்
இனியுமென்னை
எண்ணவிடாதே
ஆசைப்படத் தூண்டாதே
போதும் போதும்
என்ற நெஞ்சைத்
தந்து என்னை
ஏற்றுக்கொள்வாயாக
நீல பத்மநாபன்
விஜயதசமி(17-10-2010 ஞாயிறு)
சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா
அருள்ஜோதியே
இத்தனை நாள் வாழவிட்டாய்
எண்ணியவை எல்லாம்
அடைந்ததாய் ச்சொல்லவில்லை
ஆனால்
எண்ணாதவை
மனதுக்கு
இதம் அளிப்பவை
அல்லாதவை
தந்தருளியிருக்கிறாய்
இனியுமென்னை
எண்ணவிடாதே
ஆசைப்படத் தூண்டாதே
போதும் போதும்
என்ற நெஞ்சைத்
தந்து என்னை
ஏற்றுக்கொள்வாயாக
நீல பத்மநாபன்
விஜயதசமி(17-10-2010 ஞாயிறு)
தாத்தாவின் கட்டில்
தாத்தாவின் கட்டில்
கொல்லையில் பலாமரத் தையொன்று
நட்டு ஆசையுடன் நீர் வார்த்து
தளிர் வருதா தண்டு வளருதா என்று
ஆர்வமுடன் வளர்த்தினாள் பாட்டி
ஆண்டாண்டு பள்ளிவிடுமுறைக்கு
பலாப்பழ ஆசை அலைமோத
பாட்டிவீடு வரும் பேரன்பேத்திகள் நாங்கள்
நெடுமால் திருவாய்
நெடுநெடுவென மேலே மேலே
வளர்ந்து உயரும் மரம்
கிளைபோடவில்லை
பூக்கவில்லை..காய்க்கவில்லை
ஆடிக்காற்றில் அடிபதறி
அய்யோவென்றுஒருநாள்
தலைசாய்ந்த கோரம்
விறகாக்க வந்தவர்களை விரட்டிவிட்டு
ஒட்டுமரப்பலகைப் பிய்ந்து
அவலட்சணமாய்க் கிடந்த கட்டிலில்
தலைச்சாய்த்த பலாமரத்தாய்த்தடியை
பலகைகளாக்கி பரப்பிமெருகு பண்ணி
அவர் சயனிக்கும் சூரல் இழைக்கட்டிலின்
பக்கவாட்டில் போட்டுக்கொண்டார் தாத்தா
பாட்டி,அம்மா,சித்தி,மாமா,மாமி யாரும்
அந்த கட்டிலின் பக்கம் போகவேயில்லை
பாவம், தாத்தா மட்டும் கிடக்கிறாரேயென்று
படுக்கச்சென்ற பேரன் பேத்திகள் எங்களையும்
வேண்டாம், உடம்பு வலிக்கும்,
தூக்கத்தில் கீழே விழுந்துடூவீங்க
-ஒரேயடியாய் தடுத்துவிட்டாள் பாட்டி
*
முற்றத்தில் கொணர்ந்து போட்டிருக்கும்
அந்தகட்டிலில் தாத்தாவின் வெற்றுடம்பு
தலையில் எண்ணைத் தேய்க்கிறார்கள்
குளிர்ந்த நீர்விட்டு குளிப்பாட்டுகிறார்கள்
பட்டையாய் திருநீறிட்டார்கள்
வாய்க்கரிசி போட்டார்கள்
சுற்றிவந்து மாரடித்து
ஒப்பாரி வைத்தார்கள்
நாங்களும் அழுதோம்
அன்றொருநாள் எங்களிடம் தாத்தா
‘எனக்கிந்த கட்டில் பயன்படும் ஒருநாள்’
என்று சொன்னது இதைத்தானா
நீல பத்மநாபன்
கொல்லையில் பலாமரத் தையொன்று
நட்டு ஆசையுடன் நீர் வார்த்து
தளிர் வருதா தண்டு வளருதா என்று
ஆர்வமுடன் வளர்த்தினாள் பாட்டி
ஆண்டாண்டு பள்ளிவிடுமுறைக்கு
பலாப்பழ ஆசை அலைமோத
பாட்டிவீடு வரும் பேரன்பேத்திகள் நாங்கள்
நெடுமால் திருவாய்
நெடுநெடுவென மேலே மேலே
வளர்ந்து உயரும் மரம்
கிளைபோடவில்லை
பூக்கவில்லை..காய்க்கவில்லை
ஆடிக்காற்றில் அடிபதறி
அய்யோவென்றுஒருநாள்
தலைசாய்ந்த கோரம்
விறகாக்க வந்தவர்களை விரட்டிவிட்டு
ஒட்டுமரப்பலகைப் பிய்ந்து
அவலட்சணமாய்க் கிடந்த கட்டிலில்
தலைச்சாய்த்த பலாமரத்தாய்த்தடியை
பலகைகளாக்கி பரப்பிமெருகு பண்ணி
அவர் சயனிக்கும் சூரல் இழைக்கட்டிலின்
பக்கவாட்டில் போட்டுக்கொண்டார் தாத்தா
பாட்டி,அம்மா,சித்தி,மாமா,மாமி யாரும்
அந்த கட்டிலின் பக்கம் போகவேயில்லை
பாவம், தாத்தா மட்டும் கிடக்கிறாரேயென்று
படுக்கச்சென்ற பேரன் பேத்திகள் எங்களையும்
வேண்டாம், உடம்பு வலிக்கும்,
தூக்கத்தில் கீழே விழுந்துடூவீங்க
-ஒரேயடியாய் தடுத்துவிட்டாள் பாட்டி
*
முற்றத்தில் கொணர்ந்து போட்டிருக்கும்
அந்தகட்டிலில் தாத்தாவின் வெற்றுடம்பு
தலையில் எண்ணைத் தேய்க்கிறார்கள்
குளிர்ந்த நீர்விட்டு குளிப்பாட்டுகிறார்கள்
பட்டையாய் திருநீறிட்டார்கள்
வாய்க்கரிசி போட்டார்கள்
சுற்றிவந்து மாரடித்து
ஒப்பாரி வைத்தார்கள்
நாங்களும் அழுதோம்
அன்றொருநாள் எங்களிடம் தாத்தா
‘எனக்கிந்த கட்டில் பயன்படும் ஒருநாள்’
என்று சொன்னது இதைத்தானா
நீல பத்மநாபன்
தலைமுறைகள் நாவல் பற்றி ஒரு வாசகர்
தைலமுைறகள்
ஐயா,
“ஆண்டவேன... எம்ெபருமாேன... சிங்கவினாயகா...!” என்று விடியைல
வரேவற்கும் உண்ணாமைல ஆச்சியின் பக்திப் பிரவாகத்ேதாடு துவங்கும் இந்த
நாவைல நான் 1969 ஆம் ஆண்டு ஒரு மாணவனாக பள்ளி நூலகத்திேல
முதன் முதலாக படித்ேதன்.
இந்த 40 ஆண்டுகளிேல எத்தைன முைற படித்திருப்ேபன் என்று கணக்கு
ைவத்து ெகாள்ளவில்ைல.
என் ஊேனாடும் உணர்ேவாடும் கலந்து ேபான நாவல்; என் சுவாசகாற்ைற
ேபால என்ைன விட்டு பிய மறுக்கிறது.
கைத நடக்கும் நாஞ்சில் மிக்கு அருகான திருெநல்ேவலி நான் பிறந்த மண்
என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி; ெபருைம; ஏன் கர்வெமன்ேற கூட
ெசால்ேவன்.
இந்த வட்டார ெமாழி, இங்கு வாழும் மக்களின் கைல, இலக்கிய பண்பாடுகள்,
மத, இன உணர்வுகள் அைனத்ைதயும் ஒன்று விடாமல் கைதக்குள்ேள
வார்த்ெதடுத்திருக்கிற பாங்ைக எப்படி பாராட்டுவெதன்ேற ெதயவில்ைல.
வாசகர்கைள ைக பிடித்து கைதக்குள்ேள நீங்கள் அைழத்து ெசல்லும் லாவகம்
தான் என்ேன!
ஆசியர் கூற்றாகவும், கதாபத்திரங்களின் கூற்றாகவும் பவனி ெசய்யும் கைத,
என்ைன ஒரு ரம்மிய உலகுக்கு அைழத்துச் ெசல்வதும் அதேனாடு இையந்து
நான் நைட ேபாடுவதும் நிைனைவ விட்டு நீ ங்காத அனுபவங்கள்.
முழுக்க முழுக்க உங்களது கற்பைன என்ேற நீங்கள் ெசால்லியிருந்தாலும்,
இது கண்முன்ேன நடந்த ஒரு உண்ைமக்கைத என்ற உணர்ைவ
வாசகர்களுக்குள் ஏற்படுத்திவிட்டீர்கள். அது நாவல் தந்த தங்கள் ேநாக்கத்தின்
ெவற்றிைய உறுதிப்படுத்திவிட்டது.
ேகரள மாநில மின் வாயத்தின் கண்காணிப்பு ெபாறியாளராக இருக்கின்ற
ஒருவர், ெபாதுவாக ஆங்கில நாட்டம் அதிகமிருக்கிற ஒரு துைற சார்ந்த,
அதுவும் ெபாறியாளருக்கு இப்படிபட்ட கற்பைன திறனும் ெமாழி
பாண்டித்தியமுமா? என்று நான் வியக்காத நாட்கள் குைறவு.
தான் சார்ந்திருக்கிற இந்த சமுதாயத்ைத எந்த அளவிற்கு உற்று
ேநாக்கியிருந்தால் இப்படிப்பட்ட ஒரு கைத களத்ைத அைமத்திருக்க
முடியுெமன்று அந்த சிறிய வயதில், ஏன் இப்ேபாது கூட நான் எண்ணி
எண்ணி வியந்து ேபான(வ)துண்டு.
இந்த கைதயின் நாயகனான திரவியாய் என்ைன நான் கற்பைன ெசய்து
ெகாள்வது ஒரு சுகானுபவம்.
திரவியின் வாழ்க்ைக என் வாழ்க்ைகைய பிரதிபலிப்பதனால் இருக்கலாம்.
திரவி என்ற நாற்று வளர்ந்து விருமாவதற்குள் சந்திக்கும் பிரச்சைனகள்
தான் எத்தைன? எத்தைன?
ஒரு நடுத்தர மனிதனின் வாழ்க்ைக ேபாராட்டங்கள் தான் எத்தைன?
எத்தைன?
மகிழ்ச்சி வானில் சிறகடித்த பிள்ைள பருவத்திலிருந்து, ெபாறுப்புகளும்,
கவைலகளும் ஆக்கிரமித்து ெகாள்கின்ற 53 வயதான இன்று வைர
என்னுடேனேய பயணம் ெசய்கின்ற நாவல்.
நிழெலன்று ெசால்ல மாட்ேடன்.
ஆதவனின் ஆதிக்கமில்லா காலங்களில் நிழல் கூட நம்ைம பிந்து
ேபாகுெமன்பதால்.
தைலமுைறகளுடன் ஒரு ேபாதும் பிைவ அனுமதிப்பதில்ைல.
இறுதி வைர என்னுடன் வரும்; வர ேவண்டும் என்று விரும்புகிேறன்.
ஏெனன்றால் தைலமுைறகள் என் கவைல தீர்க்கும் அருமருந்ெதன்பைத நான்
எப்ேபாேதா கண்டு ெகாண்டுவிட்ேடன்.
எப்ெபாெதல்லாம் மனம் சஞ்சலபடுகிறேதா; எப்ெபாெதல்லாம் மனம் பாரமாக
ேதான்றுகிறேதா அப்ேபாெதல்லாம் நான் அைடக்கலம் ேதடுவது
தைலமுைறகளுக்குள்ேள தான்.
அது என்ைன ஒரு ேபாதும் ஏமாற்றியதில்ைல; மனைத இலகுவாக்க
தவறியதில்ைல; தாலாட்ட மறுத்ததில்ைல.
என்ைன ெபாறுத்த வைர தைலமுைறகள் என் தாய்.
அறியா பருவத்தில் அன்ைனயின் மடி தந்த ஸ்பசத்ைத, சுகத்ைத; பாசத்ைத
தைலமுைறகள் தருவதால் தைலமுைறகள் என் தாய்.
பைடப்பு இைற ெதாழிெலன்றால் தைலமுைறகைள பைடத்த உங்கைள நான்
இைறவனாகேவ காண்கின்ேறன்.
எவரும் ஆட்ேசபிக்க முடியாது; நீ விர் உட்பட.
சாதைனயாளர்கைள ெகௗரவிப்பதற்ெகன்ேற ேநாபல் பசு.
ஆனால் அந்த ேநாபல் பைசேய ெகௗரவிக்க ேவண்டுெமன்று எண்ணிய
ேபாது தான் அது அன்ைன ெதரசாவிற்கு வழங்கப்பட்டெதன்று எங்ேகா
படித்தது நிைனவிற்கு வருகிறது.
அேத ேபால் சாஹித்திய விருைத தங்களுக்கு வழங்கி அது தன்ைன
ெகௗரவப்படுத்தி ெகாண்டுள்ளது என்று எண்ணுகிேறன்.
மூத்த பிள்ைள மூக்காண்டி ெசட்டியார் (கைத நிகழும் காலத்திற்கு முன்னேர
காலமான கதாபாத்திரம்)
உண்ணாமைல ஆச்சி
நாகரு பிள்ைள
நாகம்ைம
உண்ணாமைல அக்கா
தவஸி பிள்ைள அத்தான்
நாகு அக்கா
சிவனைணந்த ெபருமாள் பிள்ைள
திரவியம்
சாலம்
கூனாங்காணி பாட்டா
ெபாணமு ஆச்சி
அணஞ்சி பிள்ைள ஆச்சி
பிச்ச பிள்ைள மாமா
மாலு பிள்ைள மாமா
ஆண்டி பிள்ைள மாமா
ஐயாவு பிள்ைள மாமா
தாயி சித்தி
ேகாலப்ப சித்தப்பா
நீலா பிள்ைள சித்தி
ேகாராமி வாத்தியார்
பத்மனாபபுரம் பாட்டா
குத்தாலம்
அம்மச்சி
கிருஷ்ணன் குட்டி
சசி
அம்மணி குட்டி
பார்கவி
ெசல்லன் நாடார்
ஆஹா; ஆஹா; உயிேராடு கலந்து ேபான உறவுகள்.
இவற்றில் ஒரு கதாபாத்திரத்ைத கூட அதன் உறைவ நீக்கி நான் எண்ணி
பார்ப்பதில்ைல.
இவர்கள் அைனவருேம எனது உறவுகள் என்ேற நிைனக்கிேறன்.
உண்ைமயில், என் உறவில் இத்தைன மனிதர்கைள நான் நிைனவில்
ைவத்திருக்கிேறனா? என்று என்ைன நாேன வினவி பார்க்கிேறன்.
இல்ைல என்பேத பதிலாக அைமகிறது.
பால பருவத்திலிருந்து ‘ெபய மனுஷி’யாகும் சாலம், நாகு அக்காவின்
திருமண ைவேபாகம்; உண்ணாமைல அக்காவின் சீமந்தம்; - இந்த
சமயத்திேல ெசய்யப்படும் சடங்குகள்; பின்பற்றப்படும் சாஸ்திரங்கள்,
சம்பிரதாயங்கள் - கணினியின் ஆதிக்கமும் ஆங்கில ேமாகமும் ேகாேலாய்ச்சி
ெகாண்டிருக்கும் இன்ைறய தைலமுைறயினருக்கான கால ெபட்டகம்; கருத்து
ேபைழ என்றால் மிைகயல்ல.
ெபய மனுஷி இது உங்கள் ெசால்லாட்சி!
என்ன ஒரு கண்ணியமிக்க ெசால்லாட்சி!!
கூனாங்காணி பாட்டாவின் வாழ்க்ைக - ெநறி பிறழும் மனிதர்களுக்கான
சவுக்கடி
ெசவந்த ெபருமாள்கள் இன்றும் ெவவ்ேவறு ெபயர்களில்
உலவிக்ெகாண்டுதானிருக்கிறார்கள்.
சமுதாயத்தின் துயர் துைடக்க ஓேடாடி வரும் பாமர குத்தாலிங்கங்கள்
இன்றும் நம்மிைடேய இருக்கதான் ெசய்கிறார்கள்.
இலக்கியங்கேள இலக்கணங்களாகும் அதிசயம் எப்ேபாதாவது நிகழும் என்று
சான்ேறார்கள் ெசான்னதுண்டு; நம் இதிகாசங்கைளப் ேபால.
அவ்வைசயில் தைலமுைறகைளயும் நான் ேசர்த்துக்ெகாள்கிேறன்.
என்ைன சான்ேறானாக்கி ெகாள்ளவன்று.
தைலமுைறகள் ஒரு சமுதாயத்திற்கான இலக்கண வைரயைற என்பது
மட்டுேம என் கருத்திற்கு அடிப்பைட.
அன்ைன வயிற்றில் கருவானதிலிருந்து மண்ணில் சங்கமிக்கும் வைர
நானறிந்த இந்த சமுதாயத்தின் எந்த சம்பவங்கைளயும், சாஸ்திரங்கைளயும்,
சம்பிரதாயங்கைளயும் விட்டு விடாமல் எதுவும் பிசகாமல்; பிறழாமல் இப்படி
வடித்ெதடுக்க இயலாெதன்ேற எண்ணுகிேறன்.
ஒரு நூற்றாண்டு வாழ்ந்து கவனித்தால் கூட சாத்தியமில்ைல
சாமானியர்களுக்கு.
நீவிர் சாமானியர் அல்லேவ.
கற்பைன கலந்து, வரலாற்று பின்னணி ெகாண்டு, புராணங்கைள தழுவி,
சிந்தைனயும் ெமாழியும் வசப்படுகிற எவரும் புதினங்கைள பைடத்திட
இயலும்.
ஆனால் தைலமுைறகள்?
இைறயருளால் மட்டுேம சாத்தியம்.
அந்த வைகயில் தாங்கள் இைறயருள் ெபற்றவர்.
ஐயெமன்ன?
முடிந்த முடிவு.
சற்று முன் உங்கைள இைறவன் என்ேறன்; இப்ேபாது இைறயருள் ெபற்றவர்
என்கிேறன்.
எது ச?
இது ஒரு மயக்க நிைல ேபாலும்.
இைறயருளாளைர இைறவனாகேவ இந்து மதம் ஏற்று ெகாண்டுள்ளது.
அப்படியானால் என் எண்ணம் ச.
தைலமுைறகைள விமர்சனம் ெசய்வெதன்றால் எனக்கு ேபாதிய ெமாழித்திறன்
இல்ைல என்பதாலும், ஒருேவைள ேபாதிய ெமாழித்திறன் ெபற்றிருந்தால் கூட
அது தைலமுைறகளின் பமாணத்ைத விஞ்சுெமன்பதாலும்
சிற்றறிவுக்குப்பட்டைத மட்டும் தந்திருக்கிேறன்.
ெசால் மற்றும் ெபாருட்குற்றங்கள் காணின் சிறு மதிேயனின் மடைமயாய்
கருதி ெபாறுத்தருள்க.
நான் இன்னாெரன்று இதுவைர ெசால்லவில்ைலயல்லவா?
இேதா நான்.
ெச. சண்முகேவல்ராஜா என்பது என் ெபயர்.
வயைத மட்டும் துவக்கத்திேலேய ெசால்லிவிட்ேடன்
தற்சமயம் வாசம் ெசய்யுமிடம் ெசன்ைன.
ஒரு கால் நூற்றாண்டு வங்கி அதிகா பணிக்கு பின் விருப்ப ஓய்வு
ெபற்றவன்.
எனது ைக ேபசி எண்: 98840 90725; - மின்னஞ்சல்: raja28586@yahoo.co.in
விலாசம்: இலக்கம் 6/2 ஹில் டாப் அபார்ட்ெமன்ட், வடக்கு ராஜா ெதரு,
ஆலந்ர், ெசன்ைன 600016
ெசன்ைன உண்ைமயுள்ள அன்பன்,
02.08.2010 ெச.சண்முகேவல்ராஜா
ஐயா,
“ஆண்டவேன... எம்ெபருமாேன... சிங்கவினாயகா...!” என்று விடியைல
வரேவற்கும் உண்ணாமைல ஆச்சியின் பக்திப் பிரவாகத்ேதாடு துவங்கும் இந்த
நாவைல நான் 1969 ஆம் ஆண்டு ஒரு மாணவனாக பள்ளி நூலகத்திேல
முதன் முதலாக படித்ேதன்.
இந்த 40 ஆண்டுகளிேல எத்தைன முைற படித்திருப்ேபன் என்று கணக்கு
ைவத்து ெகாள்ளவில்ைல.
என் ஊேனாடும் உணர்ேவாடும் கலந்து ேபான நாவல்; என் சுவாசகாற்ைற
ேபால என்ைன விட்டு பிய மறுக்கிறது.
கைத நடக்கும் நாஞ்சில் மிக்கு அருகான திருெநல்ேவலி நான் பிறந்த மண்
என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி; ெபருைம; ஏன் கர்வெமன்ேற கூட
ெசால்ேவன்.
இந்த வட்டார ெமாழி, இங்கு வாழும் மக்களின் கைல, இலக்கிய பண்பாடுகள்,
மத, இன உணர்வுகள் அைனத்ைதயும் ஒன்று விடாமல் கைதக்குள்ேள
வார்த்ெதடுத்திருக்கிற பாங்ைக எப்படி பாராட்டுவெதன்ேற ெதயவில்ைல.
வாசகர்கைள ைக பிடித்து கைதக்குள்ேள நீங்கள் அைழத்து ெசல்லும் லாவகம்
தான் என்ேன!
ஆசியர் கூற்றாகவும், கதாபத்திரங்களின் கூற்றாகவும் பவனி ெசய்யும் கைத,
என்ைன ஒரு ரம்மிய உலகுக்கு அைழத்துச் ெசல்வதும் அதேனாடு இையந்து
நான் நைட ேபாடுவதும் நிைனைவ விட்டு நீ ங்காத அனுபவங்கள்.
முழுக்க முழுக்க உங்களது கற்பைன என்ேற நீங்கள் ெசால்லியிருந்தாலும்,
இது கண்முன்ேன நடந்த ஒரு உண்ைமக்கைத என்ற உணர்ைவ
வாசகர்களுக்குள் ஏற்படுத்திவிட்டீர்கள். அது நாவல் தந்த தங்கள் ேநாக்கத்தின்
ெவற்றிைய உறுதிப்படுத்திவிட்டது.
ேகரள மாநில மின் வாயத்தின் கண்காணிப்பு ெபாறியாளராக இருக்கின்ற
ஒருவர், ெபாதுவாக ஆங்கில நாட்டம் அதிகமிருக்கிற ஒரு துைற சார்ந்த,
அதுவும் ெபாறியாளருக்கு இப்படிபட்ட கற்பைன திறனும் ெமாழி
பாண்டித்தியமுமா? என்று நான் வியக்காத நாட்கள் குைறவு.
தான் சார்ந்திருக்கிற இந்த சமுதாயத்ைத எந்த அளவிற்கு உற்று
ேநாக்கியிருந்தால் இப்படிப்பட்ட ஒரு கைத களத்ைத அைமத்திருக்க
முடியுெமன்று அந்த சிறிய வயதில், ஏன் இப்ேபாது கூட நான் எண்ணி
எண்ணி வியந்து ேபான(வ)துண்டு.
இந்த கைதயின் நாயகனான திரவியாய் என்ைன நான் கற்பைன ெசய்து
ெகாள்வது ஒரு சுகானுபவம்.
திரவியின் வாழ்க்ைக என் வாழ்க்ைகைய பிரதிபலிப்பதனால் இருக்கலாம்.
திரவி என்ற நாற்று வளர்ந்து விருமாவதற்குள் சந்திக்கும் பிரச்சைனகள்
தான் எத்தைன? எத்தைன?
ஒரு நடுத்தர மனிதனின் வாழ்க்ைக ேபாராட்டங்கள் தான் எத்தைன?
எத்தைன?
மகிழ்ச்சி வானில் சிறகடித்த பிள்ைள பருவத்திலிருந்து, ெபாறுப்புகளும்,
கவைலகளும் ஆக்கிரமித்து ெகாள்கின்ற 53 வயதான இன்று வைர
என்னுடேனேய பயணம் ெசய்கின்ற நாவல்.
நிழெலன்று ெசால்ல மாட்ேடன்.
ஆதவனின் ஆதிக்கமில்லா காலங்களில் நிழல் கூட நம்ைம பிந்து
ேபாகுெமன்பதால்.
தைலமுைறகளுடன் ஒரு ேபாதும் பிைவ அனுமதிப்பதில்ைல.
இறுதி வைர என்னுடன் வரும்; வர ேவண்டும் என்று விரும்புகிேறன்.
ஏெனன்றால் தைலமுைறகள் என் கவைல தீர்க்கும் அருமருந்ெதன்பைத நான்
எப்ேபாேதா கண்டு ெகாண்டுவிட்ேடன்.
எப்ெபாெதல்லாம் மனம் சஞ்சலபடுகிறேதா; எப்ெபாெதல்லாம் மனம் பாரமாக
ேதான்றுகிறேதா அப்ேபாெதல்லாம் நான் அைடக்கலம் ேதடுவது
தைலமுைறகளுக்குள்ேள தான்.
அது என்ைன ஒரு ேபாதும் ஏமாற்றியதில்ைல; மனைத இலகுவாக்க
தவறியதில்ைல; தாலாட்ட மறுத்ததில்ைல.
என்ைன ெபாறுத்த வைர தைலமுைறகள் என் தாய்.
அறியா பருவத்தில் அன்ைனயின் மடி தந்த ஸ்பசத்ைத, சுகத்ைத; பாசத்ைத
தைலமுைறகள் தருவதால் தைலமுைறகள் என் தாய்.
பைடப்பு இைற ெதாழிெலன்றால் தைலமுைறகைள பைடத்த உங்கைள நான்
இைறவனாகேவ காண்கின்ேறன்.
எவரும் ஆட்ேசபிக்க முடியாது; நீ விர் உட்பட.
சாதைனயாளர்கைள ெகௗரவிப்பதற்ெகன்ேற ேநாபல் பசு.
ஆனால் அந்த ேநாபல் பைசேய ெகௗரவிக்க ேவண்டுெமன்று எண்ணிய
ேபாது தான் அது அன்ைன ெதரசாவிற்கு வழங்கப்பட்டெதன்று எங்ேகா
படித்தது நிைனவிற்கு வருகிறது.
அேத ேபால் சாஹித்திய விருைத தங்களுக்கு வழங்கி அது தன்ைன
ெகௗரவப்படுத்தி ெகாண்டுள்ளது என்று எண்ணுகிேறன்.
மூத்த பிள்ைள மூக்காண்டி ெசட்டியார் (கைத நிகழும் காலத்திற்கு முன்னேர
காலமான கதாபாத்திரம்)
உண்ணாமைல ஆச்சி
நாகரு பிள்ைள
நாகம்ைம
உண்ணாமைல அக்கா
தவஸி பிள்ைள அத்தான்
நாகு அக்கா
சிவனைணந்த ெபருமாள் பிள்ைள
திரவியம்
சாலம்
கூனாங்காணி பாட்டா
ெபாணமு ஆச்சி
அணஞ்சி பிள்ைள ஆச்சி
பிச்ச பிள்ைள மாமா
மாலு பிள்ைள மாமா
ஆண்டி பிள்ைள மாமா
ஐயாவு பிள்ைள மாமா
தாயி சித்தி
ேகாலப்ப சித்தப்பா
நீலா பிள்ைள சித்தி
ேகாராமி வாத்தியார்
பத்மனாபபுரம் பாட்டா
குத்தாலம்
அம்மச்சி
கிருஷ்ணன் குட்டி
சசி
அம்மணி குட்டி
பார்கவி
ெசல்லன் நாடார்
ஆஹா; ஆஹா; உயிேராடு கலந்து ேபான உறவுகள்.
இவற்றில் ஒரு கதாபாத்திரத்ைத கூட அதன் உறைவ நீக்கி நான் எண்ணி
பார்ப்பதில்ைல.
இவர்கள் அைனவருேம எனது உறவுகள் என்ேற நிைனக்கிேறன்.
உண்ைமயில், என் உறவில் இத்தைன மனிதர்கைள நான் நிைனவில்
ைவத்திருக்கிேறனா? என்று என்ைன நாேன வினவி பார்க்கிேறன்.
இல்ைல என்பேத பதிலாக அைமகிறது.
பால பருவத்திலிருந்து ‘ெபய மனுஷி’யாகும் சாலம், நாகு அக்காவின்
திருமண ைவேபாகம்; உண்ணாமைல அக்காவின் சீமந்தம்; - இந்த
சமயத்திேல ெசய்யப்படும் சடங்குகள்; பின்பற்றப்படும் சாஸ்திரங்கள்,
சம்பிரதாயங்கள் - கணினியின் ஆதிக்கமும் ஆங்கில ேமாகமும் ேகாேலாய்ச்சி
ெகாண்டிருக்கும் இன்ைறய தைலமுைறயினருக்கான கால ெபட்டகம்; கருத்து
ேபைழ என்றால் மிைகயல்ல.
ெபய மனுஷி இது உங்கள் ெசால்லாட்சி!
என்ன ஒரு கண்ணியமிக்க ெசால்லாட்சி!!
கூனாங்காணி பாட்டாவின் வாழ்க்ைக - ெநறி பிறழும் மனிதர்களுக்கான
சவுக்கடி
ெசவந்த ெபருமாள்கள் இன்றும் ெவவ்ேவறு ெபயர்களில்
உலவிக்ெகாண்டுதானிருக்கிறார்கள்.
சமுதாயத்தின் துயர் துைடக்க ஓேடாடி வரும் பாமர குத்தாலிங்கங்கள்
இன்றும் நம்மிைடேய இருக்கதான் ெசய்கிறார்கள்.
இலக்கியங்கேள இலக்கணங்களாகும் அதிசயம் எப்ேபாதாவது நிகழும் என்று
சான்ேறார்கள் ெசான்னதுண்டு; நம் இதிகாசங்கைளப் ேபால.
அவ்வைசயில் தைலமுைறகைளயும் நான் ேசர்த்துக்ெகாள்கிேறன்.
என்ைன சான்ேறானாக்கி ெகாள்ளவன்று.
தைலமுைறகள் ஒரு சமுதாயத்திற்கான இலக்கண வைரயைற என்பது
மட்டுேம என் கருத்திற்கு அடிப்பைட.
அன்ைன வயிற்றில் கருவானதிலிருந்து மண்ணில் சங்கமிக்கும் வைர
நானறிந்த இந்த சமுதாயத்தின் எந்த சம்பவங்கைளயும், சாஸ்திரங்கைளயும்,
சம்பிரதாயங்கைளயும் விட்டு விடாமல் எதுவும் பிசகாமல்; பிறழாமல் இப்படி
வடித்ெதடுக்க இயலாெதன்ேற எண்ணுகிேறன்.
ஒரு நூற்றாண்டு வாழ்ந்து கவனித்தால் கூட சாத்தியமில்ைல
சாமானியர்களுக்கு.
நீவிர் சாமானியர் அல்லேவ.
கற்பைன கலந்து, வரலாற்று பின்னணி ெகாண்டு, புராணங்கைள தழுவி,
சிந்தைனயும் ெமாழியும் வசப்படுகிற எவரும் புதினங்கைள பைடத்திட
இயலும்.
ஆனால் தைலமுைறகள்?
இைறயருளால் மட்டுேம சாத்தியம்.
அந்த வைகயில் தாங்கள் இைறயருள் ெபற்றவர்.
ஐயெமன்ன?
முடிந்த முடிவு.
சற்று முன் உங்கைள இைறவன் என்ேறன்; இப்ேபாது இைறயருள் ெபற்றவர்
என்கிேறன்.
எது ச?
இது ஒரு மயக்க நிைல ேபாலும்.
இைறயருளாளைர இைறவனாகேவ இந்து மதம் ஏற்று ெகாண்டுள்ளது.
அப்படியானால் என் எண்ணம் ச.
தைலமுைறகைள விமர்சனம் ெசய்வெதன்றால் எனக்கு ேபாதிய ெமாழித்திறன்
இல்ைல என்பதாலும், ஒருேவைள ேபாதிய ெமாழித்திறன் ெபற்றிருந்தால் கூட
அது தைலமுைறகளின் பமாணத்ைத விஞ்சுெமன்பதாலும்
சிற்றறிவுக்குப்பட்டைத மட்டும் தந்திருக்கிேறன்.
ெசால் மற்றும் ெபாருட்குற்றங்கள் காணின் சிறு மதிேயனின் மடைமயாய்
கருதி ெபாறுத்தருள்க.
நான் இன்னாெரன்று இதுவைர ெசால்லவில்ைலயல்லவா?
இேதா நான்.
ெச. சண்முகேவல்ராஜா என்பது என் ெபயர்.
வயைத மட்டும் துவக்கத்திேலேய ெசால்லிவிட்ேடன்
தற்சமயம் வாசம் ெசய்யுமிடம் ெசன்ைன.
ஒரு கால் நூற்றாண்டு வங்கி அதிகா பணிக்கு பின் விருப்ப ஓய்வு
ெபற்றவன்.
எனது ைக ேபசி எண்: 98840 90725; - மின்னஞ்சல்: raja28586@yahoo.co.in
விலாசம்: இலக்கம் 6/2 ஹில் டாப் அபார்ட்ெமன்ட், வடக்கு ராஜா ெதரு,
ஆலந்ர், ெசன்ைன 600016
ெசன்ைன உண்ைமயுள்ள அன்பன்,
02.08.2010 ெச.சண்முகேவல்ராஜா
Subscribe to:
Posts (Atom)
