Thursday, June 9, 2022

நிசாகந்தி

பட்டப் பகலில் வெட்டவெளியில்

வெளிச்ச வீச்சில் பகிட்டைக் காட்டி

இதழ் விரித்து விரிந்து நிற்கும்

மலர்கள் போலன்றி

இரவின் சூழலில்

இருளின் மடியில்

சோக வெறுமையில்,

தன்னைக் காட்டி ஆட்டம் போடாமல்

எங்கிருந்து வருது எனத் தெரிவிக்காது

மெல்லிசான சுகந்தத்தைத் தந்து

அடிமனதில் அமைதியை, ஆறுதலை

தந்தருளி இறையம்சத்தை

வாரி வழங்கிடும்

சுகந்திப் பூவே

நீ வாழ்க…… வளர்க……..

நீல பத்மநாபன் 1—9--2021

No comments: