Thursday, June 9, 2022

காத்துக்கிடப்பேனே கவியரசீ

அரியாசனத்தில் உனை அமர்த்தி

அழகு பார்த்தனர்

ஆராதித்தனர்

சான்றோர்கள்

இலக்கியக்கலையின்

அரசியென புகழாரம் சூட்டினர்….!

எல்லோரும் இந்நாட்டு மன்னரென்ற

புதுயுகம் இந்நாளில்

விரலுக்கேற்ற வீக்கமென

உனை சேவிப்பவர்கள்

பெருகிவிட்டதில்

அகமகிழ்ந்தனர் ரஸிகர்கள்…..

மாறாக, அரஸிகர்கள்

குருடர்கள் பார்த்த யானைபோல்

விளக்கங்கள், விதிமுறைகளுக்கெல்லாம்

அப்பாற்பட்ட உன் சொரூபத்தில்

பரவசப்படத் தெரியாது

உதாசீனம் செய்தாலும்

உன் கடைக்கண் பார்வைக்காக,

மிச்ச நாளிலும் உனை சேவித்தவாறு

காத்துக் கிடப்பேனே கவியரசீ……

நீல பத்மநாபன் 15—1--2022..

No comments: