Thursday, June 9, 2022

சென்ற, நிகழ் காலங்கள்

இளம் காலைப்பொழுதுகளில்

தூங்கியது போதும்

எழுந்து கடமைகளைச்செய்

என பட்சி ஜாலங்களின்

பள்ளியெழுச்சி கீதங்கள் கேட்டும்

பரிதியின் இளம்கதிர்களின்

இருளகற்றும் இந்திரஜாலங்கள் கண்டும்

நித்திரை கலைந்தெழுந்த நல்ல நாட்கள்

இனி திரும்பி வரவே வராது போய் மறைந்துவிட்டனவா….?

இப்போதெல்லாம் இரவில் படுக்கையில்

விழும் நேரத்திலிருந்து காலை புலர்ந்த பின்னரும்

தொடரும் வியதிகளின் உபாதைகளும்

நடைமுறை வாழ்வுடன்உற்ற சொந்த பந்தங்களுடன்

ஒத்துப்போக இயலாத மானசீக சித்திரவதைகளும்

இறுக்கங்களும், பித்ருக்களைப்பற்றிய

சின்னசின்ன நினைவலைகளும்

அவர்கள்கூடப் போய்ச்சேர்ந்தவிடமாட்டோமா

என்ற ஏக்கங்களும் தொடரும்

நிகழ் காலம்……………

நீல பத்மநாபன் 16—6--2020

No comments: