Thursday, June 9, 2022

நிம்மதி

பளிங்கு போன்றத் தெளிந்த

நீரைக்கொண்டத் தடாகத்தை

நொடிப்பொழுதில்

கலக்கிவிடும்

யமதூதன் வாகனம் போல்

சின்ன மனங்களின்

ஊசிமுனைக் குத்தல்களால்,

குயுக்திகளால்

நிர்மலமான நெஞ்சகத்தை

நிம்மதி இழக்கச்

செய்யலாமா……..?

நீல பத்மநாபன் 6—11—2021

No comments: