Thursday, June 9, 2022

நல்லரசு/ வல்லரசு

 இதனால் அனைவருக்கும்

தெரிவிப்பது என்னவென்றால்

இந்நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும்

குழந்தை குட்டிகள், ஆண்கள் பெண்கள்,

இளைஞர்கள், வயோதிகர்கள் வேறுபாடின்றி

மருத்துவ ரீதியில் தகுதியுள்ள சகலமான பேர்களுக்கும்

மொபைல்மருத்துவ மனையில்

அவரவர் குடியிருப்பில் நேரில்ச் சென்று

கோவிட் தடுப்பூசி வழ்ங்கப்படும் ,

முன்பு பெரியம்மை., காச நோய்களுக்கு

தடுப்பூசி தந்தது போல்……

சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட….!

டும்….டும்…. டும்

9—5—2021 நீல பத்மநாபன்

 

 

No comments: