Thursday, June 9, 2022

சர்ப்ப சகவாசம்

 “Learn to accept blame, criticism and accusations without retaliation even though untrue and

unjustified” -Yogananda

இந்நாள் வரை குடும்ப நலனுக்காக

சுக சௌகரியங்களை உதறிவிட்டு,

உடல் உழைப்பையும் ஊதியத்தையும்

அந்தரங்க சுத்தியுடன் செலவழித்து,

கூடியமட்டும் பிறரை நாடாமல் வாழ்ந்த வாழ்வில்

,தேய்ந்து, ஓய்ந்துப்போகும் உள்ள உடல் உபாதைகள்.. ,

மீதி காலம் பிறரை நாடாமல் வாழ்வது

அசாத்தியமாகிவிடுமோ போன்ற

சுய இரக்கச் சிந்தனைகள்-சித்ரவதைகளில்

சுயம் எரிந்தடங்கிக்கொண்டிருக்கும்

வயசாளிக் கிழவர்….……

அவளைப் பொறுத்தவரையில்

அவனொருப் பணம் காய்க்கும் மரம்,

பிள்ளைப் பெறப் பயன்பட்ட யந்திரம்..

.ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்

கிழவனுக்கு ஆக்கிக் கொட்டும் பணியில்

சலிப்படைந்து, ”‘மனசுக்கு நிம்மதியில்லை

என்று அதைத்தேடி,,வெளியூர்களில் வசிக்கும்

மகன், மகள்களின் வீடுகளுக்கு அடிக்கடி திடீர் பயணம்……

அவர்களுடன் கோயில் குளம், கடைக்கண்ணி என்று சுற்றுலா,

மகள்-மருமக்களின் ஷஷ்டிபூர்த்தி, திருமண ஆண்டு நாள்,

பேரன் பேதிகள், கொள்ளுப்பேரர்களின் பிறந்த நாட்கள்,

அன்னமூட்டல், காதுகுத்தல். காவடி இத்யாதி

சடங்குகளில் பங்கெடுத்தல் என்ற ரகசிய திட்டங்களை

முன்கூட்டியே தீட்டிவிட்டு, அதை மூடிமறைக்க,

கிழவனைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமான

அபாண்டங்கள் குற்றசாட்டல்கள். அவதூறுகளை

அடுக்கடுக்காய் ,சரமாரியாய் வாரி இறைத்து

திக்குமுக்காடித் திணறவைத்து

ஊர் சுற்றிக்கொண்டிருக்கும்

உலகம் சுற்றும் இல்லக்கிழவி’……………

நீல பத்மநாபன்

No comments: