Thursday, June 9, 2022

வேண்டுகோள்

தூங்கையிலே வாங்கிற மூச்சு, சுழிமாறிப்போனாலும் போச்சு

                  யாரோ--பழமொழி

ஒவ்வொரு நாள்

மதிய, இரவு நேரங்களில்

படுக்கையில் சாய்கையில்

எல்லாம் வல்ல இறைவன் அளித்த

உயிரின் மூச்சே,

உன்னிடம் ஒரேயொரு

வேண்டுகோள்…..

கடைசித் துரும்பென

வண்டி வண்டியாக

சுமைகளைச் சுமந்து,

ஓடிக்களைத்துத் துவண்டபின்னரும்

சுழி மாறிப் போயி

உதவிட மாட்டாயோ……’’

நீல பத்மநாபன் 24----8----2021.

No comments: