Saturday, July 18, 2009

சீதாயணம்

சீதாயணம்

மாயமான்களின்
கவர்ச்சி லீலைகளின்
பின்னால் செல்லும்
லௌகிக நெஞ்சங்கள்
கொண்டவன்
அவதார புருஷனாகலாம்
நாலும் தெரிந்த
புருஷோத்தமனாகலாம்
இருந்தும்
'மான் அன்று அது மாயமே'
என சோதரர் சொல்லுக்கு
'இவ்வாறு இருத்தல் இயலாதோ'
என தன் சித்தத்தை
குளிர்விக்க
மாயமான்களின்
வேட்டைக்கு
விரைந்து செல்ல
பதியை தூண்டிடும்
பத்தினிகோலங்கள்தான்
இன்றும்

மாயமான்களின்
கபட ஓலங்களின்
சூழ்ச்சிக்குறி அறியாது
வீண்பழிக்கு ஆளாக்கி
நலம்நாடிகளை விரட்டியடித்து
இலக்குவக் கோடுகளையும்
தாண்டி வந்து
யுத்த காண்டத்திற்கு
வழி வகுக்கும்
கோமாளாங்கிகள்

No comments: