Sunday, July 5, 2009

இலை உதிர் காலம்

இலை உதிர் காலம்

பஞ்சு போன்ற கால் பதித்து
மெல்ல அணுகிடும்
சரத்கால கொழுந்துகள்
தளிர்த்திட
இதயமெனும்
இகலோக விருட்சத்தின்
இலைகள்
கருகிச் சருகாகி
உதிரச் செய்திடவும்
மீண்டும்
தளிரிட்டுத் தழைக்கவும்
செய்திடும்
விந்தைகள் வினைகள்
காலம்காலமாய்
களைக்காமல்
நிறுத்தாமல்
செய்துகொண்டிருக்கும்
நாயகனே
உன் பாதம்
சரண்

No comments: