Saturday, July 18, 2009

அறுபத்தியெட்டு

அறுபத்தியெட்டு

பிஞ்சிலே பழமாகிவிட்டால்
காய்ப்பருவம் முழுமை பெறுமோ
பழப்பருவத்தில் விதைக்காய்
மண்ணுக்குள் கரையத்தானே
காலபைரவன் காட்டும் வழி
அவசிய அனாவசியங்களுக்காய்
அமிதமாய் விரையம் செய்த
உணர்ச்சிகளால்
பிஞ்சிலே மிஞ்சிவிட்ட
முதுமை 'கிழ'மை

காண்டீபம் கீழ்வைத்த
பார்த்தனுக்கு ஊட்டிய
எதிர்கொள்ளும் வலிமையின்
துளியிலும் துளியதை
உன் ஊரில் வந்து நிற்கும்
வயோதிகனுக்கும் தந்தருள
குருவான அப்பனே
உன் தாழைப் பணிகிறேன்

No comments: