Tuesday, August 11, 2020

ஏனோ.....

சென்ற சில நாட்களாக
நிசிகளின் நடு யாமங்களில் 
நித்திரையின் இடைவெளியில்
காலத்தில் கரைந்த பின்னர், 
தான் சதா பார்த்துப் பழகும்
இந்த படுக்கை, அறை, வீடு, வெளியெல்லாம் 
எப்படியிருக்கும் என்ற வினோத கற்பனை……. 
 நாளொன்றாகும் முன் அணிந்திருக்கும் ஆடைக் களைந்து 
புத்தாடை கொள்ள 
ஆர்வம் கொள்ளும் மனமே, 
ஆண்டாண்டுகள் உருண்டோடி 
காலப் பழக்கத்தில் பழுதுகள் நேர்ந்த, 
கூண்டைக் களைந்து ”வெளி” யில் ஏற’ 
அவசமா…..இல்லை..அச்சமா…….…….. 

 நீல பத்மநாபன் 19-7-2020