Monday, July 13, 2009

குற்ற சம்மதம்

குற்ற சம்மதம்

கொலையொன்று செய்தேன்
பல நாட்களாய்
கதவு கட்டளை
புத்தகம்
படுக்கையறை
பேதமின்றி
கண்ணுக்குத் தெரியாது
ஓடிக்களித்தும்
கருவண்ணக் கழிவுகளை
மனம்போல் விதைத்தும்
பற்களின் பதிவுகளை
அழுத்தமாய் பதித்தும்
போக்குக் காட்டிக்கொண்டிருந்த
உனக்கு
கருணைக் கொலைக்குத் தந்த
மணம் கமழும் கேக்கை
ஆன்மாவில்
தேக்கி வைத்திருக்கிறாயா
என்னருமை மூஷிகனே
வரும் பிறவியில்
திருப்பித் தந்திட

No comments: