Sunday, July 19, 2009

கோபியின் கொஞ்சல்

கோபியின் கொஞ்சல்

கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
உனை மீண்டும் அடைந்திட
ஆசை கொண்டு
பிறவிகள் பல
வேண்டிப் பெற்று
யுகாந்திரங்கள் பல
நீந்திக் கடந்து
கலியுகம் தாண்டியிந்த
கணினி யுகத்தில்
தனிப்பட்டுப் போன
தற்கால கோபியின்
குமுறல் இது

மானிடப் பிறவியின்
இடையறா இன்னல்களை
மறந்திட
ஆயர்பாடியில்
ஆடிக்களித்த
ஆனந்த நாட்களை
கனவதில் காண்கின்றேன்
கனிவுடன் கரைகின்றேன்
அந்த நாளும் வந்திடாதா என
ஆறாத பிரிவுத் துயரால்
வாடி வதங்கின்றேன்


உள்ளம் உருகிட
கண்ணீர் வடிந்திட
உனை நாடிய ராதையின்
விழிநீர் நீ
துடைக்கலையோ
செயலிழந்த பார்த்தனுக்கு
பாதை நீ காட்டலையோ
பிஞ்சு நாள் ஏழைத்தோழனை
கை கொடுத்து தூக்கலையோ
நாராயணீயம் பாடியவரின்
கொடும் நோய் அகற்றலையோ


கர்ம யோகத்தின்
கரடுமுரடான பாதைகள்
கடந்து
உற்றம் சுற்றம்
மாயையெனப் புரிந்து
புருஷாயிசின்
கடைக்கோடியில்
மீண்டும் உனை நாடி
வந்து நிற்கும்
இவன் முன்
ராதை முன் ரமணனாய்
அசுரர் முன் மோகினியாய்

இன்னுமொரு
ரமணியின் கோலம் கொண்டு
வந்திடலாகாதோ
நெஞ்சத்து சுமையெல்லாம்
கண்ணீராய் கரைந்துருக
உன் திருமடியில் தலை வைத்து
அழுது தணிந்திடும்
அருட்பேற்றை
தந்தருளும் பெரும் தயையை
வரி வழங்கிடலாகாதோ
என்னருமை ராதையின்
கிருஷ்ணா கார்முகில் கண்ணா

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: