Wednesday, May 25, 2022

இன்று இன்னுமொரு நாளே

இன்று தீபாவளி…

விடிந்தும் விடியாத காலைப்

புலர்கையில், வெளியில்,

அண்டையிலும், அகலத்திலும்

கிடுகிடுக்கவைக்கும்

பட்டாஸ் முழக்கங்கள்….

வானில் மின்னி மறையும்

ஜோதி கோளங்கள்…புஸ்வாணங்கள்……

சின்னாட்களில் பயந்தும் பயத்தை 

வலுக்கட்டாயமாக விரட்டி வெல்ல முயன்றும்

காலைப் பொழுதுகளில், மத்தாப்புக்கள்,

பட்டாஸ்கள் கொளுத்திய நினைவுகளில்

முழுகி, முக்குளியிட்டு

கீழேக் கீழேச் செல்லச் செல்ல

பிரக்ஞை மங்கி மயங்கி……,மழுங்கி,,,,,,,

நீல பத்மநாபன்

27-10-2019   தீபாவளி நாள்

No comments: