Saturday, May 11, 2019

தீ நாக்கு


தீ நாக்கு
பெரிய சிறிய மரங்கள் மட்டுமல்ல
புல்பூண்டுகளையும் சுட்டெரித்து
வெந்தணலாக்கியும் அடங்காத
காட்டுத்தீ…….
எதிரில் மாட்டிக்கொண்டவர்களை
சுட்டுப்பொசுக்கியும் நிற்காது,
வக்கணைகளையும் அபாண்டங்களையும்
வாய்க் கூசாது சரமாரியாய் வாரி இறைத்து,
அகராதி காணா கெட்ட வார்த்தைகளையும்
கூரம்புகளாய்ப் பாய்ச்சி
ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும்
……………………………………………………………………………..
   நீல பத்மநாபன்


No comments: