Saturday, May 11, 2019

மூட மதி


  மூடமதி
வாயில் வெள்ளிகாரண்டியுடன்
பிறந்தவனில்லை அவன்……….
உடன் பிறப்புக்கள், தெருவாசிகள், ஊரக்காரர்களின்
எதிர்மறைச்சிந்தனைகள், செயல்கள், மோதல்களின்
இடையில் வாழ்ந்தான், வளர்ந்தான்…….
அடிபட்டு, கடிபட்டு, முட்டி மோதி
தனக்கென சுயம்புவாய் ஓர் ஆளுமை
காலத்தின் கிரமத்தில் அவனிடத்தில்
ஆழ்ந்திறங்கியிருக்கவேண்டும்
அதுவும், நின்ற இடத்திலேயே தேங்கிவிட விடாமல்,
மீண்டும் மீண்டும், காலத்திற்கு,,பருவத்திற்கு ஏற்ப
புதுப்பித்துக்கொள்ளும் முயற்சிகளை, பயிற்சிகளைத்
தொடர்வதிலும் பின்னடையவில்லை…..
இவ்வாறெல்லாம்i இந்நாள்வரை கற்றுத்தெரிந்துத்தெளிந்தவை,,
சம்சார சாகரத்திலிருந்து கரையேற
அபயக்கரம் நீட்டாமல் கைவிட்டுப்போனது ஏனோ……………….?

                                                       நீல பத்மநாபன்
  
                                                                                                                                     
                                                                                                                                                                                                                                                            

No comments: