Saturday, May 11, 2019

சாயங்கால மேகங்கள்


             சாயங்கால மேகங்கள்

காரணம் தெரியாமல்
கார்மேக படலங்கள்
வந்து சூழும் அகம்………
ஓய்வு ஒழிச்சலின்றி சதா ஓடியாடி
உழைத்த உழைப்பிற்கெல்லாம்
ஒத்துழைத்து, தற்போது
முடங்கிப்போய்விட்டப்பின்னரும்
என்னதான் முனைந்தும் 
வயோதிக சகஜ அவசங்கள், அல்லல்களால்
அவஸ்தைப்படசெய்துவிட்ட உடம்பும் உள்ளமும்…..….
ஒரு காலத்தில் கை வராதா என
ஆசைப்பட்டவை
கை எட்டும் தொலைவில் வந்து கண் சிமிட்டியும்
கைப்பற்ற தோன்றாத விரக்தி நிலை…….
யார், எவற்றிற்கெல்லாம்
ஆயுளை, பொருளை செலவழித்தோமோ
அவர்கள், அவற்றிற்கெல்லாம்
வேண்டாதவன், அதிக பாரம்
ஆகிவிட்டோமோ என்ற மன மயக்கம்….
ஒவ்வொரு நாள் புலர்கையிலும்………
இன்னுமா ஈசனே……..

                        நீல பத்மநாபன்..



No comments: