Wednesday, July 8, 2009

முழுமையை நாடி

முழுமையை நாடி

உள்ளுருகும்
பண்ணை செவிமடுத்து
மனம் நெகிழ்ந்து
இசைக்க நினைக்கையில்
படைப்புத் தினவின்
சிகரத்தின்
அற்புத உருவை
எழுத்தாணி வழி
வார்த்தையாய்
வடிக்கையில்
உலக மகா தத்துவங்களை
காலம் காலமாய்
கண்டெடுத்து
கடைந்தெடுத்து
ரத்தினச் சுருக்கமாய்
உரைத்திட
குரல்வளையில்
கொணர்கையில்
.............

No comments: