Monday, May 30, 2022

வாக்கு தேவதை

 ஐந்தாகும் முன் --மூன்றோ நான்கோ வயதினிலெ

உன் முன் வைத்திருந்த

வளைவுகள், சுருள்கள் கொண்ட எழுத்துக்களும்,

உருட்டல்கள், வளைத்தல்களைச் செதுக்கி

நேர்கோடுகளைக் கொண்ட எழுத்துக்களும்—

மலையாளம், தமிழ் எழுத்துக்களைக் கொண்ட

காகித அட்டைகள்……

குருநாதர் மடியிலும், அப்பா மடியிலும்

பட்டு வேட்டி உடுத்தி உட்காரவைத்து,

தன் பிஞ்சு விரல்களைப் பிடித்து,

உன் முன்னால் தாம்பாளத்தில்

பரப்பியிருக்கும் தானியத்திலும்,

கீழே பரப்பியிருக்கும் வெள்ளை மணலிலும்,

ஆனா, ஆவன்னா என்று எழுத்துக்களும்,

1, 2 என்று எண்களும் எழுத வைத்து

பள்ளிக்கிருத்திய

பிஞ்சுநாள் நினைவுகள்

எதோ முன் ஜென்மத்தில் நடந்ததுபோல்…………!

அன்று தொட்டு இன்று இக்கணம் வரையிலும்

என்னை ஆட்டிப் படைக்கும்

வாக் தேவதையே

உனை அடிபணிகிறேன்…..

நீல பத்மநாபன் 15—10—2021 விஜயதசமி

No comments: