Tuesday, November 13, 2012

தேடித்தேடி


            தேடித் தேடி  
 அமைதியைத் தேடிதேடி
அவனியில் சகல சராசரங்களுக்கும்
சாந்தியும் சமாதானமும் அளிக்கும்
ஆண்டவன் சன்னிதிகளெல்லாம்
மாறி மாறிச் சென்றுபார்த்தால்
அகத்தை அவனில்
லயிக்க விடாத
ஆர்ப்பாட்டங்கள்.......,
ஆரவாரங்கள்...........,
போட்டாப்போட்டிகள்.......,
ஒலி,ஒளி,சுற்றுப்புற மாசுக்கள்.....,
சந்தைக்கடைகள் போல்,
ச்ந்துமுனைகள் போல்,
சட்டசபைகள் போல்.......!
                          நீல பத்மநாபன்
                            9-11-2012

                                      


                                                                      
               
                            

No comments: