Tuesday, November 13, 2012


                                                  சூக்தங்கள்

              பலதில் உடன்பட்டாலும்
                சிலதில் மாறுபட்டால்
                எதிரியாய் முத்திரை
                நாட்டிலும்
                வீட்டிலும்....

                பிறவி வாசனையாய்
                உடன் வந்த துறை
                அன்னமிடும் தொழிலாய்
                அமையாதிருப்பினும்
                வந்து வாய்த்ததில்
                முழுத்திறமையைக் காட்டி
                முன்னுக்கு வர
                முயற்சி கொள்ளலாகாதா.....
                                            நீல பத்மநாபன்   
                                                 2011

No comments: