Monday, June 28, 2010

போதும்

போதும்

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா

அருள்ஜோதியே
இத்தனை நாள் வாழவிட்டாய்
எண்ணியவை எல்லாம்
அடைந்ததாய் ச்சொல்லவில்லை
ஆனால்
எண்ணாதவை
மனதுக்கு
இதம் அளிப்பவை
அல்லாதவை
தந்தருளியிருக்கிறாய்
இனியுமென்னை
எண்ணவிடாதே
ஆசைப்படத் தூண்டாதே
போதும் போதும்
என்ற நெஞ்சைத்
தந்து என்னை
ஏற்றுக்கொள்வாயாக

நீல பத்மநாபன்
விஜயதசமி(17-10-2010 ஞாயிறு)

1 comment:

G Radhakrishnan said...

The auhor takes a brief peep into the irony of life. He has done it in a symbolic manner.