Monday, June 28, 2010

ஆத்மானந்தம்

ஆத்மானந்தம்

அறிவாளிகளிடம்
அசடனாகவும்
அசடர்களிடம்
அறிவாளியாகவும்
மேலும் கீழும்
தத்தளிக்கும் மனமே
அறிவாளியிடம்
அறிவாளியாக
இயலாவிடிலும்
அசடனிடமும்
அசடனாகலாமல்லவா
மேலும் மேலும்
அறிவதால்
அகந்தையை அகற்று
ஆத்மானந்தம் கொள்வாய்

பேரானந்தம்

ஒரு வாசல்
அடைந்துவிட்டதென்று
ஓய்ந்துவிடாதே
உனக்குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒம்பது வாசல்கள்
ஒவ்வொன்றாய்
திறந்திட
முயற்சிச்செய்வாய்
பேரானந்தம்
பெருகிடக் காண்பாய்

No comments: