Friday, July 28, 2017

பயம்


                                        பயம்
  ந வாசுதேவ பக்தா நாம சுபம் வித்யுதே க்வ்சித்
   ஜன்ம மிருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே
                             ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம்
  சோதனை கட்டங்கள், எப்படி எதிர்கொள்ளப்போகிறோமென்ற
     மலைப்பு, பரபரப்பு, பதட்டம்எதிபார்ப்புக்கள்,
    ஏமாற்றங்கள், நிறைவில் குறைகண்டும் , குறைவில்
    நிறைகாண இயலாமையுமெல்லாம்
  அழுத்திய கட்டங்களில் போதுமிந்த
   பிறவியென சலித்துக்கொண்ட கணங்களும் உண்டு....
  இனியும் பிறவியற்ற பேரின்ப நிலையை நாடுகையில்
   ஜன்மாந்திர துக்கம் ஒருபக்கம்….
     மனக்கோட்டைகளை கட்டிமுடிக்கும்முன்
      களம் விடவேண்டி வந்துவிட்டால்
  முடிக்கும் பொருட்டு மீண்டும் பிறக்கவேண்டி
    வந்துவிடுமோ என்ற பயம் இன்னொருபக்கம்,
    வாட்ட புதிய ஆசைகளை திட்டங்களை
     முளயிலேயே கிள்ளிக்களையவும் முயற்சி....
      பிஞ்சு நாட்களில் அண்டை அயலார் வீடுகளில்
 நடக்கும் மரணங்கள் பீதியை விதைத்ததுண்டு..
 சுழிமாறிப்போய்விடும் தூங்கையிலெ வாங்கிற மூச்சு,
  கூத்தாடி கூத்தாடி போட்டுடைப்பு
  நீரினில் முழுகி நினைப்பொழிதல்
எல்லாம் கண்டு, கேட்டு, பழகி....
தனக்கு நேர்ந்து விடுமோ என்ற பயத்தை
அனாயாச மரணமென்ற விடாத  வேண்டுதல் மூலம்
ஒரளவுக்கு கட்டுக்குள் நிறுத்த முடிந்தும் ,
உற்றவர், உடையவர், இளையவர்களுக்கு
நிகழ்ந்துவிடுமோ என்ற் அச்சத்திலிருந்து
பிழுது விலக மறுக்கும், பார்த்தனின் மூடமனம்....
தள்ளாமையை எதிர்கொள்ளப் பழகிவிட்டபின்பும்,
வேதனை ரோதனைகள்,உபாதைகள்,
 பிறர் உதவியின்றி இயங்க இயலாமை
இன்னுமின்னும் எத்தனையோ அவசங்களுக்கு
ஆளாக்கிவிடுமோவென்று
வியாதி பயம் விட்டபாடில்லையே
என்ன செய்வேன் வாசுதேவா.....!                  
                                                            நீல பத்மநாபன்
,



    





No comments: