Saturday, October 29, 2016

நவயுக யயாதிகள்


                                            நவயுக யயாதிகள்

                      வம்பு தும்புகளுகளில் மாட்டிக்கொள்ளாமல்
                     தெரிந்து பிறருக்கு கெடுதல்
                     நினைக்காமல், விளைவிக்காமல்
                     கரடுமுரடான யந்திர வாழ்வின்
                       சோதனை கட்டங்களில்
                    நிறைய உணர்ச்சிகளை
                      விரையம் செய்ய வேண்டியிருந்தும் கூட,
                    கடவுள் அருளால் எப்படியோ கடந்து வந்ததினால்
            தானோ என்னமோ, வயோதிகத்திலும்
                   மிஞ்சியிருக்கும் அற்பச்சொற்பம்
         க்ரியா சக்தி......,ஆத்ம பலம்......!.
         அதையும், ஆர்ப்பாட்டமான உலகியல் வாழ்வை
                 மேலும் நீடித்து அனுபவிக்க தமக்குள் கூடுபாய்ச்ச
                  வழி நாடி வரம் தேடி நடக்கும்
                 நவயுக பிள்ளையாண்டர்கள்.......

                               நீல பத்மநாபன்


No comments: