Monday, May 25, 2015

ஆப்பரேஷன் வெற்றி, ஆனால்


             

                     ஆப்பரேஷன் வெற்றி,  ஆனால்....

                      நீல பத்மநாபன்
             
             வானம் கறுத்தால், மழை பொழிந்தால்
             நீர் ஓடி ஒழுகிப்போக விடாத,
      நகரில் குறுக்கேயும் நெடுகேயும் கிடக்கும்,
            அகலமான சாக்கடைகள் மீது காண்க்ரீட் தூண்கள்,
      சிமண்ட் சுவர்கள் பலமாக கட்டி உயர்த்தப்பட்ட
      கட்டடங்கள்-கடைகள், வீடுகள், கிட்டங்கிகள்,
      கட்சி காரியாலயங்கள், கோயில்கள், திருமண மண்டபங்கள்......!
      ராஜ பாட்டைகள் சந்துகள் வீடுகள் குடிசைகள் கடைகள்
       கோயில்கள் பேதமின்றி எங்கெங்கும் சாக்கடைநீரும்,
       கூடவே அடித்துக்கொண்டு வரும் கழிவுப்பொருட்களும்
       புகுந்தோடுவதைக் கண்டு பற்பல திட்டங்கள் உதயம்.....
       ட்ராக்டர்கள், காவற்படை சகலவித தயாரெடுப்புகளுடன்
       சாக்கடைகளை மூடியிருந்த  கான்க்ரீட் ஸ்லேபுகள்,
          அனுமதியின்றி கைப்பற்றி  அவை மீது கட்டப்பட்டவை
      எல்லாம் தூள் தூள்....,அங்கிங்கு சிற்சில தடைகளிருந்தும்.
      அடைமழை ஆர்ப்பரிக்க ஆங்காங்கே சாக்கடை குப்பைக்கூளங்கள்,
      அடைப்புக்கள் அப்புறப்படுத்தும் வேலைகள்
     அமோகமாய் நடந்தேற நடந்தேற.......
          தடைகள் நீங்கி  பெருக்கெடுத்தோடி வரத்தொடங்கிய                                            
     மழை வெள்ள்மும் சாக்கடை நீருமெல்லாம்
          போய்ச்சேரவேண்டிய இடம் தெரியாதுடன்,
     வழக்கமாய்ப் போகும் சாக்கடைப்பாதைகள் யாவும்
     கல்லும் மண்ணும் பிளாஸ்டிக் குப்பைக்கூளங்களும்
     நிறைந்து கிடப்பதால்.....நகரெங்கணும்
         வீடு, கடை, வெளி பேதமின்றி  வெள்ளம் வெள்ளம்.
         முன்னாலிருந்ததை விட வெள்ளம்
          சாக்கடை கழிவுநீர் கலந்த பெரும் வெள்ளம்..

                                                                                 24—5--2015


         

             
          


No comments: