Tuesday, September 30, 2014

1)வலியும் கிலியும் 2)மூட சொர்க்க




  
        நீல பத்மநாபன்

           
1          வலியும் கிலியும்
 
வலியை சகித்துக்கொள்ள
நெடுநாள் பயின்று பயின்று
ஒரளவுக்கு பழகமுடிந்தும்
வலிகள் வரப்போகிறதென்ற
ஆரம்ப சைகைகள்
கிடைக்கத் தொடங்கையிலேயே
நெஞ்சில் வந்து உடும்பாய்
கவ்வுக்கொண்டுவிடும்
வரப்போகும் வலியை
நினைந்துள்ள கிலி.......!
அதை அப்புறப்படுத்த
எடுத்துக்கொண்ட
அப்பியாசங்களெல்லாம்
தோல்விக்குமேல் படுதோல்வி
என் செய்வேன்..,.என் செய்வேன்...,
பராபரமே..............
         
2        மூடசொர்க்கம்
 
புருஷாயிசின் முக்காலே முண்டாணியும்
கொஞ்சம் விவேகமுடன் வாழ முயன்றதால்
கிடைத்த பயனென்னமோ நரகம்தான்.....!
மிஞ்சியுள்ள மிச்சசொச்சம் நாட்களை
முட்டாளாய் கடத்திவிட்டாலென்ன என்றொரு
யோசனை......, நடக்குமா……?
 



No comments: