Thursday, May 29, 2014

இப்போதெல்லாம்.....

 இப்போதெல்லாம்.......
                                    
                       நீல பத்மநாபன்
     
        இப்போதெல்லாம்
   அவளுக்கே அவளைப் பிடிப்பதில்லை..
   உதிர்ந்தது போக மிஞ்சிய
   நரைத்த தலைமயிரின் கீழ்த்
   தெரியும் வழுக்கை..
      ஒளீயிழ்ந்து கண்ணீர்
      நிறையும் விழிகள்.......
      கீழெ கருமை வளையங்கள்......
    சுருக்கங்கள் விழுந்துவிட்ட முகம்..
    நிகழ்காலக் கண்ணாடியை விட,
     நிழலாகவேனும் சுயமுகத்தின்
     சுந்தர சொப்பனங்களை
  காட்டி வாட்டும் அசதியின் மயக்கத்தில்
     வழுதிச்சென்றுவிடும்  உணர்வுகள்

No comments: