Friday, October 3, 2008

பவளமல்லி

நெடுநாள் வாடாது
வண்ணம் காட்டித்திகழும்
வாடாமல்லியாக வேண்டாம்
ஒருநாள் தட்பவெப்பம் கூட
தாக்குப்பிடிக்க வலுவின்றிப்
பொட்டென்று
பொசுங்கி உதிர்ந்தாலும்
அந்நாள் முழுதும்
மனம் நெகிழும் வாசம் தரும்
பகட்டில்லா
பவளமல்லியாகட்டும்
இந்த ஜன்மம்.

No comments: