Thursday, April 15, 2010

தலைமுறைகள் தாண்டிய பாட்டு

தலைமுறைகள் தாண்டிய பாட்டு

பூவுடன் இணைந்த மணம் போல்
அழகுடன் கமழ்ந்த திறனால்
களபலியான தங்கம்மையே தாயம்மையே
அந்தப்புரம் அழைத்து
அறநெறி தவறிய
கொற்றவனின் கொடும் நீதியில்
குமுறிக் கொந்தளித்து
பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே
கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை
உயிருடன் கரைத்துவிட்டு
மலையும் மடுவும் தாண்டி
நதியும் கரையும் கடந்து
தெற்குத் தெற்கொரு தேசமாம்
பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை
இரணியல் வந்து
எங்களுடன் பயணித்த
சிங்க விநாயகரையும்
அவர் பார்வையிலேயே
ஒடுப்பறையில் நாகரம்மனையும்
நாகரம்மன் சன்னிதியில்
தங்கம்மை தாயம்மை
உம்மிருவரையும் குடிவைத்தோம்
கும்பிட்டோம
தலைமுறை தலைமுறைதாண்டிவந்து
பகைமறந்து மன்னித்து
பாரிடமெங்கணும்
மாதர்குல நீதிகள்
செழித்தோங்கிட
பொங்கலிட்டோம் குரவையிட்டோம்
வாழ்த்துறோம் வணங்குறோம

நீல பத்மநாபன்்

No comments: